Pages

Thursday 9 July 2020

திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கம்


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும்என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் 14.11.2019 அன்று நடைபெற்றது. 7 ஆம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார். மன்றத்தின் செயலாளர்  வே.ராஜகுரு முன்னிலை  வகித்தார்.

கருத்தரங்கத்துக்கு பள்ளியின் உதவி தலைமையாசிரியர் .சண்முகநாதன்  தலைமை வகித்துப் பேசுகையில் “உலகளவில் நமது கலைகள் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இவற்றின் சிறப்பை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்கவேண்டும்” என்றார்.
கருத்தரங்கத்தில் ஓவியக்கலை குறித்து ஜீ.ஹரிதா ஜீவா, சிற்பக்கலை குறித்து .அபிராமி, நிகழ்கலை குறித்து வி.டோனிகா, மண்பாண்டக்கலை குறித்து மு.பிரவீணா, கப்பற்கலை குறித்து சே.ஆனந்தி, தமிழர் வணிகம் குறித்து ஜெ.யோகஸ்ரீ ஆகியோர் பேசினர். 8-ம் வகுப்பு மாணவன் மு.மகேஸ்வரன் நன்றி கூறினார். 8-ம் வகுப்பு மாணவிகள் சு.முத்துமாரி, ஜெ.சுஜிதாஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எட்டாம் வகுப்பு மாணவர்கள் து.மனோஜ், பாலாஜி, அஸ்வின்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


நாளிதழ் செய்திகள்








மாணவியர் பேசியதன் காணொளிகள்

'தமிழர் வணிகம்' ஆறாம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி ஜெ.யோகஸ்ரீ



'ஓவியக்கலை பற்றி 7-ஆம் வகுப்பு மாணவி ஆணைகுடி ஜீ.ஹரிதா ஜீவா



'நிகழ்கலை' எட்டாம் வகுப்பு மாணவி பள்ளபச்சேரி வி.டோனிகா


'கப்பற்கலை' - 7ஆம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி சே.ஆனந்தி



'சிற்பக்கலை' - 8ஆம் வகுப்பு மாணவி பொக்கனாரேந்தல் க.அபிராமி



'மண்பாண்டக்கலை' குறித்து எட்டாம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி மு.பிரவீணா



No comments:

Post a Comment