Pages

Friday 26 November 2021

தொல்லியல் தகவல் அட்டைகள் - ராமநாதபுரம் மாவட்ட ஊர்கள்

 

முகவை பெயர்க்காரணம்

திருப்புல்லாணி

பெருமை மிகு இராமநாதபுரம்

இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை

அல்தரை

சீனப்பானை ஓடுகள்

ஆசிரியம் கல்வெட்டுகள்

கோபெக்லி தேபே

எஸ்.பி.பட்டினம்

கள்ளிக்குடி

தொண்டி

திருவாடானை

தேவிபட்டினம்

உலக மரபு வார விழா 2021 கருத்தரங்கம்

 


தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, இராமலிங்க விலாசம் அரண்மனை மற்றும் அகழ்வைப்பகம் சார்பில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கீதா மாணிக்க நாச்சியார் முன்னிலை வகித்தார். மாணவி தேன்மொழி வரவேற்றார்.  இராமநாதபுரம் தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ் தமிழக அகழாய்வுகள் என்ற தலைப்பிலும், இராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகக்  காப்பாட்சியர் வி.சிவக்குமார் அருங்காட்சியகவியல்  பற்றியும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் வே.இராஜகுரு இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடயங்கள் பற்றியும் பேசினர். மாணவி இராமவள்ளி நன்றி கூறினார். தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர்கள் கவிதா, அருணா பிரபா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




நாளிதழ் செய்திகள்






திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் தொல்லியல் கருத்தரங்கமும் கண்காட்சியும்

 

உலகப் பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் தொல்லியல் கருத்தரங்கமும் கண்காட்சியும் 23.11.2021 அன்று நடைபெற்றது.

உதவி தலைமையாசிரியர் .சண்முகநாதன் தலைமை வகித்தார். 9-ம் வகுப்பு மாணவி ந.அல்ஃபஷிகா வரவேற்றார். மன்றத்தின் செயலர்  வே.ராஜகுரு முன்னிலை  வகித்தார். தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் கருத்தரங்கத்தையும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் உலகப் பாரம்பரிய வாரம் குறித்து தை.அஸ்மியா பானு, முகவை பெயர்க்காரணம்  குறித்து ஜீ.ஹரிதா ஜீவா, கோபெக்லி தேபே குறித்து ப.பானு, பெருவழிகள் குறித்து ஜெ.சுஜிதா, சீனநாட்டுப் பானை ஓடுகள் குறித்து சு.பாலா, ஆசிரியம் கல்வெட்டுகள் குறித்து ச.பிரியதர்ஷினி ஆகியோர் பேசினர். 9-ம் வகுப்பு மாணவன் தே.டேவிட் லிவிங்டன் நன்றி கூறினார். மு.ஜெயரஞ்சனி, த.ஹில்மியா ஹபிபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

பின்பு நடந்த கண்காட்சியில் துருக்கி நாட்டிலுள்ள உலகின் முதல் கோயிலான கோபெக்லி தேபே, வணிகப் பெருவழிகள், ஊருக்குப் பாதுகாப்பு தரும் பாடிகாவலர்கள் பற்றிய ஆசிரியம் கல்வெட்டுகள் ஆகியவற்றின் படங்கள், போர்சலைன், செலடன் வகை சீனப்பானை ஓடுகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் க.அன்பழகன், மாணவர்கள் முவித்கண்ணன், சு.முனீஸ்வரன் செய்திருந்தனர்.


நாளிதழ் செய்திகள்









மாணவர்கள் பேசிய காணொளிகள்






இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

    இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைமேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 12.12.2017 அன்று மாலை 2 மணிக்கு நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பேசுகிறார்

கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. முத்துசாமி தலைமை வகித்தார். வாலந்தரவை பள்ளி ஆசிரியர்  திரு. இரவீந்திரன் வரவேற்றார்.  மாவட்டக் கல்வி அலுவலர்   பேசும்போது,  தமிழகத்தின் வரலாறு,  கலை, பண்பாடு,  தொல்லியல்  போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றம் மாணவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கி தேடல் பண்பை வளர்க்கும். வரலாறு தெரிந்தவர்களால் தான் வரலாற்றை பாதுகாக்க முடியும்.  இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட மாவட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி மக்கள் கல்வியில் சிறந்து விளங்கியதை அழகன்குளம், தேரிருவேலி  அகழாய்வு மூலம் நாம் நிரூபித்திருக்கிறோம்.  இம்மாவட்டத்தில்  கலைகள், பாரம்பரிய பாடல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகளவில் உள்ளன.  அவற்றை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவர இந்த அமைப்பின் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்  திரு. வே.இராஜகுரு  பேசுகிறார்

          இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்  திரு. வே.இராஜகுரு  பேசும்போது, இம்மன்றத்தின் நோக்கம்,  இதன் அமைப்பு,  மாணவர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்தும்விதம், மாணவர்களிடம் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க வேண்டியதன் அவசியம்,  தொன்மைச் சிறப்புவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல்,  இந்த மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நமது பாரம்பரியச் சிறப்பை மாணவ சமுதாயத்தினரிடம் கொண்டு செல்வது ஆகியவை பற்றிப் பேசினார். 


வட்டானம் பள்ளி ஆசிரியர் திரு. இராபர்ட் புரோமியர் நன்றி கூறினார்.  இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைமேல்நிலைப்பள்ளியிலிருந்து  60    பொறுப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.


நாளிதழ் செய்திகள் 






 இணைய இதழ்

நக்கீரன்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=203393