Pages

Monday 13 March 2017

இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையை பார்வையிட்ட ஆறாம் வகுப்பு மாணவியர்



 
திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் ஆறாம் வகுப்பு பயிலும் 9 மாணவியர் இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனையைக் காண 08.02.2017 அன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.



அரண்மனையில் வரையப்பட்டிருந்த அழகான ஓவியங்களை மாணவிகள் பார்வையிட்டனர். அரண்மனை ஒரு கோயிலைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதையும், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள்கள், ஈட்டிகள், வளரிகள் போன்றவை பற்றியும் அரண்மனைக் காப்பாட்சியர் திரு. ஆசைத்தம்பி மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.
      அருங்காட்சியகத்தில் உள்ள அழகன்குளம் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள், முதுமக்கள் தாழி போன்றவற்றை மாணவிகள் பார்த்தனர். 


      அரண்மனை பற்றிய கையேடுகளை தொல்லியல் துறையினர் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினர்.
      நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா அவர்களின் ஆலோசனையின்படி மன்றப் பொறுப்பாசிரியர் இராஜகுரு செய்திருந்தார்.


திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ‘பழைமையைக் காப்போம்’ பயிற்சி முகாம்

சுத்தம் செய்யும் பணியில் மாணவ மாணவியர்


இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ‘பழைமையைக் காப்போம்’ என்ற தலைப்பில் பயிற்சி முகாம் 28.02.2017 முதல் 02.03.2017 வரை மூன்று  நாட்கள் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.  


                    
பயிற்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மு.பிரேமா தலைமை தாங்கினார். கோயில் பேஷ்கார் கண்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவன் தனபால் வரவேற்றார்.
முத்துவீரப்பன் சிலை உள்ள பகுதி சுத்தம் செய்யுமுன்

முத்துவீரப்பன் சிலை உள்ள பகுதி சுத்தம் செய்தபின்
 பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 45 மாணவ மாணவியர் இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டு ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்து பராமரிப்பது பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். கோயிலில் உள்ள தூண்கள், சிற்பங்களின் அமைப்பு பற்றி பயிற்றுவிக்கப்பட்டது. திருப்புல்லாணி கோயிலை திருடனிடம் இருந்து காத்த முத்துவீரப்பன் என்ற வீரனுக்கு சேதுபதி மன்னர் அமைத்த சிலை இருந்த பகுதியை மாணவர்கள் சுத்தம் செய்தனர். கோயில் கோபுரத்தின் முதல் தளத்தில் உள்ள சேதுபதிகள் கால மரச்சிற்பங்களில் கோயில் தலவரலாறு, பாகவதக் கதைகளை விளக்கும் சிற்பங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். கோயிலின் மேல் பகுதியில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர்.

கோயிலில் உள்ள பாண்டியர், விஜயநகர, நாயக்க, சேதுபதி மன்னர்கள் காலக் கல்வெட்டுக்களை படிக்கவும், படி எடுக்கவும் பயிற்சி பெற்றனர். இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் காளிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறினார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்துணவு அமைப்பாளர் ஜெயபால் செய்திருந்தார்.
கலந்துகொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் விவரம் :
வ.எண்
‘அ’ பிரிவு
‘ஆ’ பிரிவு
‘இ’ பிரிவு
1
தனபால்
வைத்தீஸ்வரன்
விஜய்
2
வைசின்
வைசுதன்
ராஜபாண்டியன்
3
பிரியகற்பகராஜா
பிரபாகரன்
ராஜ்கண்ணா
4
அருண்குமார்
வினோத்
முகம்மது இர்சாத்
5
முகம்மது தாரிக்
தினேஷ்
ரோகித்
6
மாதவன்
பாரதிராஜா
புவனேஸ்வரன்
7
எம்.முத்துக்குமார்
இராமு
இரமேஷ் ஹரிகரன்
8
கோ.முத்துக்குமார்
லில்லிக்குமார்
அபர்ணா
9
அஜித்குமார்
கரிஸ்குமார்
கீர்த்தனா
10
அழகர்சாமி
வெங்கடேஸ்வரன்
விசாலி
11
தர்மராஜ்
தனுஷ்
அபிநயா
12
தனுஷ்ராஜ்
சுமித்ரா
சினேகா
13
மதுவாசுகி
சுவேதா
வாணி
14
தேவிகா


15
நிவேதிகா


16
முத்துச்செல்வி


17
பானுமுத்துப்பிரியா


18
காவியதாரணி


19
சூரியபிரபா


 

 

நாளிதழ் செய்திகள்