Pages

Tuesday 18 July 2017

திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவிகள் கடலோசை பண்பலை வானொலியில் பங்கு கொண்ட பல்சுவை நிகழ்ச்சி தொகுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவிகள் அபர்ணா, அபிநயா, சினேகா, விசாலி ஆகியோர் ‘இராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியத் தாவரங்கள்’ என்ற தலைப்பில் பாம்பனில் இருந்து ஒலிபரப்பாகும் கடல் ஓசை 90.4 பண்பலை வானொலியில் பங்கு கொண்ட பல்சுவை நிகழ்ச்சி தொகுப்பு.

Monday 3 July 2017

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரியத் தாவரங்கள் பற்றிய கருத்தரங்கமும் கண்காட்சியும்



தாவரங்கள் குறித்த விளக்கமளிக்கும் மாணவிகள்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியத் தாவரங்கள் என்ற தலைப்பில்  கருத்தரங்கமும், கண்காட்சியும் 30.06.2017 அன்று நடைபெற்றது.     
            
கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவியர்
     இக்கருத்தரங்கத்துக்கு முதுகலை ஆசிரியர்  பிரேமா தலைமை வகித்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவி இரா.கீர்த்திகா வரவேற்றுப் பேசினார். முள் கருவை மரங்கள் அடர்ந்துள்ள நம் மாவட்டத்தில் ஆங்காங்கே பலவித மூலிகை தாவரங்கள் பாரம்பரியமாக பல ஆயிரம் ஆண்டுகள் வளர்ந்து வருவதாக கருத்தரங்க அறிமுக உரையில் மன்ற
 பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு தெரிவித்தார்.
நிகழ்ச்சி நிரல்
இப்பள்ளியின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் 8 பேர் இம்மாவட்ட பாரம்பரிய மூலிகைத் தாவரங்களைப் பற்றிப் பேசினர்.
கொக்கிமுள் ஆதண்டை பற்றி சா.கவிதாவும், ஆத்தி மரம் பற்றி பா.அபர்ணாவும், சங்கஞ்செடி பற்றி இரா.புவனிஷாவும், கடலாரை பற்றி மு.விசாலியும், மணிபூவந்தி பற்றி க.சுவித்தாவும், உகாய் எனும் மிஸ்வாக் பற்றி கு.சினேகாவும், நாட்டு வீழி பற்றி த.நமீதாவும், பொந்தன்புளி மரம் பற்றி மு.அபிநயாவும் பேசினர். ஒன்பதாம் வகுப்பு மாணவி மு.திவ்யா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாரம்பரியத் தாவரங்களின் இலை, கனி, தண்டு, பூ ஆகியவற்றின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அன்பழகன், கிறிஸ்டி ஹெலன் மேரி, ஸ்டீபன் ஜெயராஜ், முகம்மது சாரா சமீமத் அலியா  மற்றும் மாணவர்கள் பிரவின், கனிஷ்கர், முருகேஸ்வரன், மனோகரன், பாலமுருகன், ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

நாளிதழ் செய்திகள்








VIKATAN eMAGAZINE


தாவரங்கள் பற்றி மாணவிகள் பேசியதன் ஒளிப்பதிவுகள்