Pages

Monday 10 September 2012

தஞ்சைப் பெரிய கோயில்



மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கி.பி. 1003 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப் பெற்று, கி.பி. 1010 ஆம் ஆண்டில் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோயில் இமயமலையின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3.66 மீட்டர் உயரம் கொண்ட லிங்க வடிவிலான சிவன், மாமன்னன் இராஜராஜனின் பெயரால் இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டார். ஏறத்தாழ 50 கி.மீ. தூரத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பரப்பில் இக்கோயில் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. எட்டுத் துண்டுகளான 81.284 டன் எடையுள்ள சிகரத்தைக் கொண்டதாய் விளங்கும் இத்திருக்கோயிலின் விமானம் (கருவறை மேலுள்ள கட்டடப்பகுதி)  60.96 மீட்டர் உயரம கொண்ட பிரமாண்டமான படைப்பு. சதுரவடிவிலான கருவரையைக் கொண்ட இக்கோயில் இரட்டைச் சுவர்கள் கொண்ட அடித்தளம் காரணமாக மேலுயர்ந்து நிற்பது சாத்தியமானது. கருவறையினைச் சுற்றிவரும் வகையில் திருச்சுற்று அமைக்கப்பட்டு திருச்சுற்று சுவர்களில் ஓவியங்களும் மேல் அடுக்கில் சிற்பங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
     தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலின் மீது இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட அன்பை விளக்குவதாக உள்ளது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டான் எனவும் தெரிகிறது. நிதித்தேவைகள், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்து வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
கேரளாந்தகன் நுழைவுவாயில்

விமானம்

விமானம்

விமானத்தின் பின்பகுதி

திருச்சுற்று மாளிகையுடன் விமானத்தின் தோற்றம்

No comments:

Post a Comment