Pages

Monday 10 September 2012

குடுமியான்மலை


z புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் 
நாயக்கர் கால கட்டுமானக்கோயில்
.
z இவ்வூரில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால குடைவரைக் கோயில் ஒன்றும், அதே காலகட்டத்தில் அமைக்கப்பட்ட  இசைகல்வெட்டும், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில் ஒன்றும் உள்ளது.

z இங்குள்ள இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக் கிடைக்கின்றன. இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
z 'சித்தம் நமஹ சிவாய' என்று தொடங்கும் இசை  பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
z இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும்.
z முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது.
z குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும்.
z குன்றின் மீது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருக்கலாம்.
மலையில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள்

குடைவரையில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்ற வலஞ்சுழி துதிக்கை விநாயகர்

இசைக்குறிப்புகள்


சதுரவடிவ ஆவுடையார் லிங்கம்


No comments:

Post a Comment