Pages

Monday 10 September 2012

பிள்ளையார்பட்டி


·      குடைவரைகள் தமிழகத்தில் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் அமைக்கப்பட்டதாக முன்பு கருதப்பட்டது.
·      ஆனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானதாகும்.

·      பிள்ளையார்பட்டி குடைவரையில் மூன்று சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வலதுபுறமாக மடிக்கப்பட்ட துதிக்கையுடன் விநாயகர், லிங்கோத்பவர்,சிவலிங்க  உருவ சிற்பங்கள் அழகு வாய்ந்தவை. 
·      கி.பி. ஆறாம் நூற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு இங்கு காணப்படுவதன் மூலம் இது கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப் புலனாகும்.
·      இதேபோன்ற வலதுபுறமாக மடிக்கப்பட்ட துதிக்கையுடன் விநாயகர் சிற்பம் குடுமியான் மலையிலுள்ள குடைவரையிலும் காணப்படுகிறது.
·      கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment