Pages

Monday 11 July 2016

வட்டானம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் துவக்கவிழா




தொல்பொருள்கள் கண்காட்சியில்  தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு பழமையான பானை ஓடுகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கிறார்.
வட்டானம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் துவக்கவிழா மற்றும் தொல்பொருள்கள் கண்காட்சி 06.07.2016 அன்று நடைபெற்றது. விழாவுக்கு  பட்டதாரி ஆசிரியர் மிக்கேல்ராஜ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் இராபர்ட் புரோமியர் வரவேற்றுப் பேசினார்.


நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் மாணவர்களின் பங்கு  பற்றியும் மன்றப் பொறுப்பாசிரியர் சேவியர் பேசினார். திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான இராஜகுரு சங்ககாலம் முதல் சிறப்புற்றிருந்த தொண்டி பகுதியின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றிக் கூறினார்.
அதன் பின்பு நடைபெற்ற தொல்பொருள்கள் கண்காட்சியில் பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட தக்களி, பாண்டி ஆட்டத்துக்குரிய சில்லுகள், இரும்புத்தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அவற்றைப் பார்வையிட்டனர்.
பட்டதாரி  ஆசிரியர் கிருபாகரன் நன்றி கூறினார். கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை  சுஜிதா, ஆனந்த், அய்யனார், ஹெப்சி மேத்யூ, அப்துல் அஜிஸ், மணிகண்டன், முகம்மது அர்சத் ஆகிய மாணவர்கள் செய்திருந்தனர்.

பட்டதாரி ஆசிரியர் மிக்கேல்ராஜ், பட்டதாரி ஆசிரியர் இராபர்ட் புரோமியர் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் சேவியர் ஆகியோர்

நாளிதழ் செய்திகள் 

 






2 comments:

  1. வாழ்த்துக்கள் தோழரே . பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழரே . பயணம் தொடரட்டும்

    ReplyDelete