அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் ராமேசுவரத்தையொட்டிய
பேக்கரும்பு என்கிற இடமாகும். இந்த பேக்கரும்பு பெயர் காரணம் குறித்து,
ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர்
வே.இராஜகுரு கூறியதாவது:
இராமேசுவரம் தீவில் வேளாண் தொழில் செய்வதற்கு கலப்பையைப் பயன்படுத்துவது
இல்லை. ராமரின் பாதங்கள் பட்ட புண்ணிய பூமியில், ஏர் பூட்டி உழும் தொழில்
செய்யக் கூடாது. மீறி செய்தால் லிங்கம் முளைக்கும் என்ற நம்பிக்கையே
இதற்குக் காரணமாகும்.
ராமேசுவரம் அருகே 4 கி.மீ தொலைவில் பஞ்ச கல்யாணி ஆற்றையொட்டி எருவை என்ற
செடியினத்தின் ஒருவகை புல் வளர்கிறது. நாணல் செடி போல வளரும் இது துளை உடைய
செடி இனமாகும். இந்த புல் கரும்பைப் போல காணப்பட்டதால் ‘பேக்கரும்பு’
(பே-என்றால் இல்லை என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. பின்னர்
இப்பகுதியில் குடியிருப்புகள் உண்டான பிறகு, மக்கள் அந்த பகுதியையே
‘பேக்கரும்பு’ என்று அழைத்ததாக கூறினார்.
No comments:
Post a Comment