Pages

Thursday 5 January 2012

முதுமக்கள் தாழி


 
o  பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகைத் தாழிகளையே முதுமக்கள் தாழி என்கிறோம்.

o  குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் புறம்(228) கலம் செய்  கோவே‘ என்று  முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது.  

o  முதுமக்கள் தாழியின் காலம் பெருங்கற்காலம். பெருங்கற்காலம் கி.மு.1000 லிருந்து கி.மு. 3000  வரையிலான காலத்தைச் சேர்ந்தது.

o  தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

o  இங்கு  கண்டுபிடிக்கப்பட்ட தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தினாலான நெற்றிப்பட்டம், செம்பினால் ஆன ஆண்,பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினாலான கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன. 

 

No comments:

Post a Comment