Pages

Monday 2 January 2012

கழுகுமலையில் பயிற்சி முகாம்

திருப்புல்லாணி எஸ்.எஸ்.எ.எம். அரசு மேல் நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் மூலம்  பாரம்பரியம் குறித்த பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடைபெற்றது. மன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு கழுகுமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
      கழுகுமலையில் பாறையைக்குடைந்து அமைக்கப்பட்டுள்ள முருகன் கோயில், விஜய நகர மன்னர்களால் தெப்பக்குளத்துடன் மேம்படுத்தப்படுத்தப்பட்டதை மாணவர்கள் நேரில் கண்டறிந்தனர்.
      மலையின் கிழக்குப்புறம் உள்ள வெட்டுவான் கோயில் பாண்டியர் கால குடைவரைக்கோயில் கலைப்பணிக்குச் சான்றாக உள்ளது. இது எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்று ஒற்றைக் கற்கோயிலாகும்‍‌. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இக்கோயில் சிற்ப வேலைப்பாடு நிறைந்தாக உள்ளது.
      மேற்குப்புற மலையின் சரிவில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ள சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. இங்கு சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோர் நினைவாக சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர். 
       மன்ற பொறுப்பாசிரியர் இராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் இராஜாமணி ஆகியோர் பயிற்சிக்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாணவர்கள் கழுகுமலை பற்றிய குறிப்புகளை பதிவு செய்துகொண்டனர்.
KALUGUMALAI 1

KALUGUMALAI 2

KALUGUMALAI 3

KALUGUMALAI 4
KALUGUMALAI 5

KALUGUMALAI 6

KALUGUMALAI 7

KALUGUMALAI 8
     

No comments:

Post a Comment