நன்றி தினமலர்...
கலைஞர் காலத்தில், செம்மொழி மாநாட்டுக்குப் பின் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை உருவாக்க 2010இல் அரசு உத்தரவிட்டது. பின் இந்த அரசு ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் மூலம் அவை சென்றடைய ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்வி அலுவலர்கள் தன்முனைப்புடன் செயல்பட்டு வரும் ஆசிரியர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது வேதனையானது. குறிப்பாக பெண் ஆசிரியர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி பயமுறுத்தும் நடவடிக்கைகள் கொடுமையானது.
கீழடி போன்ற தொல்லியல் தளங்கள் ஆசிரியர், மாணவர்கள் கண்டறிந்தது தான்.
அரசு நல்லது நடக்கவேண்டும் என்று திட்டங்களை உருவாக்குகிறது. ஆனால் செயல்படுத்துபவர்கள்....
'கல்யாண வீடா இருந்தா மாப்பிள்ளையா இருக்கணும். இழவு வீடா இருந்தா பிணமா இருக்கணும். மாலையும் மரியாதையும் எனக்குத் தான் கிடைக்கணும்னு' எஜமான் படத்தில் நெப்போலியன் பேசும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment