எங்கள் ஆய்வுக்கு தொடர்ந்து மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கி வரும் மாண்புமிகு அமைச்சர் எங்கள் அன்பு அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்.
வே.இராஜகுரு, தலைவர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.
https://x.com/i/status/2034237165371380058
*நமது மண்ணின் தொன்மை வரலாற்றை மீட்டெடுக்கும் இளம் வேர்கள்*
*விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவச் செல்வங்கள் சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகள் (Microliths), இரும்புக்காலப் பானையோடுகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்களைக் கண்டெடுத்துள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.*
*மாணவர்களிடம் வரலாற்றுத் தேடலை உருவாக்கிய பள்ளித் தலைமையாசிரியர் திரு. அன்புவேலன் அவர்களுக்கும், அதனை உறுதி செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு. ராஜகுரு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். கீழடியைத் தொடர்ந்து நமது விருதுநகர் மண்ணும் பழம்பெரும் வரலாற்றைப் பேசும்!*


No comments:
Post a Comment