Pages

Thursday, 5 February 2026

அறுநூற்றுவர், அறுநூற்றுமங்கலம்

 வணிகரின் பாதுகாவல் படை வீரர்கள் அறுநூற்றுவர் தங்கள் பெயரில் உருவாக்கிய ஊர் அறுநூற்றுமங்கலம். மேலும் அறிய படியுங்கள் தினகரன் 'பழமை காப்போம்' பகுதியில்... 13.01.2026


கண்ணைக் கவரும் கந்திக்கோட்டை

 

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில், ஜம்மலமடுகு நகரத்தில் இருந்து 16கி.மீ தொலைவில் உள்ளது கந்திக்கோட்டை. வரலாறும், புவியியலும், இயற்கையும், சிற்பக்கலையும், கோயிலும், மசூதியும் இணைந்த அதிசயமாக அமைந்துள்ள இவ்வூர் நம் கண்ணுக்கும், கருத்துக்கும், அறிவுக்கும் விருந்து தருவதாக அமைந்துள்ளது. 

          வரலாற்று மரபுநடைப் பயணமாக அங்கு சென்றுவந்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு அவர்களின் பயண அனுபவம் கட்டுரையாக தினகரன் மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில் வெளிவந்துள்ளது.